×

சிறுமிக்கு பாலியல் தொல்லை போக்சோவில் சித்தப்பா கைது

பெரம்பூர்: ஓட்டேரி நம்மாழ்வார்பேட்டையை சேர்ந்த 14 வயது சிறுமிக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. உறவினர்கள் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அவளை அழைத்துச்சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்தனர். புகாரின்பேரில் புளியந்தோப்பு அனைத்து மகளிர் போலீசார் விசாரித்தனர். அதில் சிறுமியின் பெற்றோர் உளுந்தூர்பேட்டையில் தோட்ட வேலை செய்து வருகின்றனர். அவளின் தாய்க்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதால் ஓட்டேரியில் உள்ள அவளது சித்தப்பா ஹரிமஞ்சன்(47) வீட்டில் தங்கி ஓட்டேரி அரசு பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறாள். ஹரிமஞ்சன் தனியார் பள்ளியில் தமிழாசிரியர். வீட்டில் ஆள் இல்லாதபோது அடிக்கடி ஹரிமஞ்சன் சிறுமியை மிரட்டி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதனையடுத்து மகளிர் போலீசார் ஹரிமஞ்சனை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

Tags : Chittappa ,Pokcho , Chittappa arrested for sexually harassing girl in Pokcho
× RELATED விழுப்புரம் அருகே மாணவியை கூட்டு...